Wednesday, May 15, 2013

வேசி


 



















மூவாறு வயசிலே
குத்தவச்சவ நான்

முழுசா ஒருவேளை
கஞ்சுகூட கிடைக்கலையே
பசிக்கும் பசிக்குதடா

ஈரத்துணியில் வழிதேடி
நாட்களுக்கும் நரை விழுந்தது

ஒருவேளை கஞ்சுக்கு
வேலைக்கு விட்டான் எங்கப்பன்

பகலெல்லாம் துக்கம்
இரவில்தான் வேலையாம்

வேசி என்று பெயர்வச்சாங்க
சாகத்துணிந்தவளுக்கு
இருட்டறைதான் துணையாச்சு

இரவுகள் நரகமானது
மேனிஎங்கும் ரணமானது

சுகம் தேடி அலையும் கூட்டங்களுக்கு
பொறியில் மாட்டிய எலிகள் நாங்கள்
எங்களை வேட்டையாடும்
புலிகள் இங்கு ஏராளம்

உயிரில்லா உடலாய் பிணமாய்கிடக்கின்றோம்
பிணந்தின்னும் ஓநாய்களே
சொல்லமுடியாத இடமெல்லாம் வலிக்குதடா

உங்களுக்கு இறக்கமில்லையா -இல்லை
அந்த கடவுள்தான் இங்கில்லையா

யாரேனும் எங்களை காப்பாற்றுங்களேன்
உடலை மீட்டாவது அடக்கம் செய்யுங்களேன்
அடுத்த ஜென்மம் இருந்த
பெண்ணாக மட்டும் வேண்டாம்
இது ஒரு பாவ பொறப்பு
வேண்டாமடா
இனி ஒரு ஜென்மம்
வேண்டாவே வேண்டாம் இதுபோதும்

2 comments:

  1. இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete